திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

தஞ்சை மாவட்டம், சித்திரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (41). கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
Updated on
1 min read

தஞ்சை மாவட்டம், சித்திரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (41). கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிறை வளாகத்தில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே. நகர் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com